
இடம்: செம்பரா மலையுச்சிக்கு(2100 மீ) இட்டுச்செல்லும் பாதை, வயநாடு, கேரளா.
காலம்: ஆகஸ்ட்,2005
இல்லை. மலேயேறிதான் வந்தோம். கீழே நாங்கள் வந்த மலைகள் இருக்கின்றன. அனைத்தும் திரண்டு இருக்கும் மேகத்தால மூடப்பட்டுள்ளன. அது ஒரு அற்புதமான மலையேற்ற அனுபவம். பாறையில் ஆணியடித்து அதில் கயிறு தொங்கவிட்டு ஏறவில்லையே தவிர பிற அனைத்து நுட்பங்களும் தேவைப்பட்டன. பல இடங்களில், பெரிதாக வளர்ந்திருக்கும் யானைப்புற்களைப் பற்றிக்கொண்டுதான் balance செய்ய முடிந்தது. படத்தில் உள்ள எமது குழுவினர் எங்களை வந்தடைவதற்காக காத்திருக்கிறோம். அவ்வப்போது பருவமழையின் சாரல்கள் வந்து நனைத்தபடி இருந்தன. இங்கே ஒரு ‘டீ’ கிடைத்திருந்தால் எப்படி இருக்கும்! என்ன செய்ய? பாதுகாக்கப் பட்ட வனப்பகுதியாயிற்றே? இயற்கை எழிலை வேண்டுமட்டும் பருகினோம் :-)