Thursday, January 29, 2009

பரங்கித்துரையின் சிலை

மும்பையில் உள்ள ஒரு பூங்கா(கஸ்தூர்பா பாங்-என்று நினைக்கிறேன்)வில் இந்த அற்புதமான சிலை உள்ளது. வெள்ளைக்கார துரை(? இல்லை ஏதேனும் மராட்டிய வீரரா?) மிடுக்காக குதிரை மீது அமர்ந்துள்ளார்.



(படத்தை பெரிதாக பார்க்க படத்தின்மீது சொடுக்கவும்!)

சிலை மிகவும் உயிரோட்டத்துடன் இருக்கிறதல்லவா? சிலையை வடித்தவன் யாரோ தெரியவில்லை!. இது உலோகச் சிலையா? அல்லது கற்சிலையா?

எந்த பிற்தயாரிப்பும் (post production) செய்யவில்லை. புகைப்படத்தின் கம்போசிஸன் நன்றாகவே வந்திருக்கிறது அல்லவா? வலது பக்கம் சிலையை அடுத்துள்ள இடைவெளி இடது பக்கத்தைவிட அதிகமாக இருக்கிறது என்பதைத் தவிர! இனி நீங்கள்தான் சொல்லவேண்டும். உங்கள் கண்களுக்கும் கருத்துகளுக்கும் விட்டுவிட்டு விடை பெறுகிறேன்.

No comments:

Post a Comment